திண்டிவனம் அருகே ஏரியில் கொலை செய்து எரிக்கப்பட்டவரின் கிராபிக்ஸ் புகைப்படம் வெளியீடு

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அருகே திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள பாதிரி, மதுரா ஊராட்சிக்குட்பட்ட கரிக்கம்பட்டி ஏரிக்கரையில் சம்பவத்தன்று கழுத்து அறுக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதனை அவ்வழியாக மாடு மேய்க்க சென்ற சிலர் பார்த்துவிட்டு ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற எஸ்.பி. தீபக் சிவாச், அச்சடலத்தை பார்வையிட்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கருகிய நிலையில் உள்ள சடலத்தால் இறந்தவரை அடையாளம் காண முடியாத நிலையில் இறந்தவரின் உருவத்தை கிராபிக்ஸ் உதவியுடன் போலீசார் வரைந்துள்ளனர். இப்புகைப்படத்தின் மூலம் இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் ஒலக்கூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள 9498153644, 9498152864 என்ற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்: செல்வப்பெருந்தகை

ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால் மூடல்; புதர்மண்டிக் கிடக்கும் சுற்றுலாத்துறை விடுதி