இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற எஸ்.பி. தீபக் சிவாச், அச்சடலத்தை பார்வையிட்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கருகிய நிலையில் உள்ள சடலத்தால் இறந்தவரை அடையாளம் காண முடியாத நிலையில் இறந்தவரின் உருவத்தை கிராபிக்ஸ் உதவியுடன் போலீசார் வரைந்துள்ளனர். இப்புகைப்படத்தின் மூலம் இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் ஒலக்கூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள 9498153644, 9498152864 என்ற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.