ஸ்வீடன்: கிழக்கு ஸ்வீடனில் 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.