கடலூர் : கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள் 5 பேர் கட்டடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். சிறையில் போதிய தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி கைதிகள் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் சிறை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.