கடலூர்: கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி ராஜேஸ்வரி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளார். தேர்வு தினத்தன்று அதிகாலையில் தந்தை ரத்தினவடிவேல் திடீரென உயிரிழந்த நிலையிலும் ராஜேஸ்வரி தேர்வு எழுதினார். தந்தை இறந்த நிலையில் தேர்வெழுத வந்த ராஜேஸ்வரிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். தந்தை ரத்தினவடிவேல் இறந்த நாளன்று எழுதிய இயற்பியல் தேர்வில் ராஜேஸ்வரி 100-க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.