மெடிகட்டா அணையின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது அரசியல் உள்நோக்கமுடையது. சந்திரசேகரராவை 3வது முறையாக முதல்வர் ஆக்குவதற்கு மக்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் தெலங்கானாவுக்கு வெளியே உள்ள கர்நாடகா,ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிஆர்எஸ் கட்சி வலுவடையும். இதை காங்கிரஸ், பாஜ விரும்பவில்லை. தேசிய அளவில் அவரது வளர்ச்சி தங்களுக்கு பாதிப்பு என இரு கட்சிகளும் நினைக்கின்றன. இதனால் அவர் தோல்வியடைவதற்கு சதி செய்கின்றன. இதுதான் அவர்களது திட்டம். ஏற்கனவே இது போல் கூட்டு சதியில் இரு கட்சிகளும் ஈடுபட்டன. இதற்காக அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்’’ என்றார்.