அந்த நிதியத்தை யார் நிர்வகிக்கிறார்கள், எவ்வளவு பணம் செலவாகியிருக்கிறது போன்ற எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனிடையே தற்போது பி.எம்.கேர்ஸ் நிதியில் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2,900 கோடி நன்கொடையாக வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது மேலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பிரதமர் மோடியின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு யார் பணம் தருகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. நிதி பங்களிப்பில் 60% பொதுத்துறை நிறுவனங்கள் தந்துள்ளன. எந்த வித சட்ட அனுமதியும் இன்றி அரசு மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா?,
சட்ட அனுமதியின்றி பெறப்படும் நிதிக்கு பொறுப்பு, கண்காணிப்பு எங்கே? இந்த நிதிக்கு யார் பணம் தருகிறார்கள் என்பது ஏன் கூறப்படுவதில்லை? யாருக்கு பணம் தரப்படுகிறது என்பதுவும் சொல்லப்படுவதில்லை. இந்த நிதி தானாகவே முன்வந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். இது தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின் கீழும் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மீது தலைமை கணக்கு தணிக்கையர் ஆய்வு நடைபெற வேண்டும். நிதி வசூல் அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு முரணானது என்பதை நிரூபிப்பேன் இவ்வாறு கூறினார்.