எங்களுடன் விவாதிக்கத் தயாரா என பிரதமருக்கு கார்கே சவால்
காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு பற்றி எங்களுடன் விவாதிக்கத் தயாரா என பிரதமருக்கு கார்கே சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள்.வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வர்.
சீனப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது தான் அவர்கள் மீது மோடி எடுக்கும் நடவடிக்கையா?
தைவான் பள்ளத்தாக்கில் 20 இந்தியர்கள் உயிர்த்தியாகம் செய்த போதும் சீனா என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை இதன் மூலமாக சீனாவை தப்பிக்க விட்டுள்ளதாகவும் அவர் குற்றசாட்டு வைத்தார். தற்போது உத்தரகண்ட் , லடாக், அருணாசல பிரதேசத்தில் சீன ராணுவத்தினர் தடவாளங்களை கட்டி வருகின்றனர். சீனப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது தான் அவர்கள் மீது மோடி எடுக்கும் நடவடிக்கையா?”. இது தான் உங்களது தேச பற்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
“மக்கள்தொகை அடிப்படையில் ஓபிசி, எஸ்சி., எஸ்டி-க்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பது ஏன்?
மக்கள்தொகை அடிப்படையில் ஓபிசி, எஸ்சி., எஸ்டி-க்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பது ஏன்?. மேடைகளில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மோடி பேசி வருகிறார். வாக்குகளுக்காக பிரிவினைவாதம் பேசும் பிரதமர் என்றே மோடியை மக்கள் நினைவுகூர்வர்.
வெயிலை விட மோடியின் கொள்கை மக்களை சுட்டெரிக்கிறது
வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருவதாக மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.