கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

கோவை: கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகம் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தலைமை ஆசிரியை வழக்கு தொடர்ந்துள்ளார். பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி சீருடையில் 32 மாணவ, மாணவிகள் பங்கேற்றதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும் பழிவாங்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!

கடன் செயலி மூலம் வாங்கிய பணத்தை செலுத்திய பிறகும் மிரட்டல்; தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!