சீர்காழி: தருமகுளத்தில் உள்ள உணவகத்தில் வழங்கபட்ட பரோட்டாவில் பூரான் கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உணவகத்தில் இருந்து மூர்த்தி என்பவர் வாங்கி சென்ற பரோட்டாவில் பூரான் கிடந்ததை அடுத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தார். வாடிக்கையாளர் அளித்த புகாரை தொடர்ந்து, ஆய்வு செய்த அதிகாரிகள் உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.