விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உதயநிதி ஸ்டாலின் குறித்து பாடல் ஒன்றை பாடி பேச்சை ஆரம்பித்தார், இதையடுத்து நிருபர்களிடம் திண்டுக்கல் லியோனி கூறுகையில், தேர்தலில் மிகச் சிறப்பாக தனது பணிகளை திமுக தொடங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வாரத்திற்கு நான்கு முறை வந்தால்கூட கண்டிப்பாக நோட்டாவுக்கு கீழ்தான் தமிழக மக்கள் பாஜவுக்கு வாக்களிப்பார்கள். கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். இதனால் கூட்டணியில் எந்தப் பிளவும் ஏற்படாது. தமிழக பாடநூல் திட்டத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை. பழைய பாடநூல் திட்டமே அச்சடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.