குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால் அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது. அந்த வகையில், மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு 12 ஏ.சி. EMU பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தட மின்சார ரெயில்களில் ஏ.சி, பெட்டிகளை இணைக்க வாய்ப்புள்ளது.