சென்னை :சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.