செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய டி.எஸ்.பி-ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Related posts

ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு..!!

புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு

கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்