இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறை சிறப்பு இயக்குநர் வௌியிட்ட அறிக்கையில், “2023 ஏப்ரல் மாதத்தில் மட்டும் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 2.25 லட்சம் செல்போன் எண்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மாநிலங்களிலும் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டுகளை விற்பனை செய்த 517 கடைகள் கண்டறியப்பட்டு, அந்த கடைகள் சிம் கார்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.