திருமணம் ஆகி சில நாட்களில் அவர் தனது மனைவியை சட்டிஸ்கர் அழைத்துச் சென்றார். அங்கே அவர் தனது மனைவியை மது போதையில் தகாத முறையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. கணவரின் தொல்லை தாங்க முடியாமல் நித்யாஸ்ரீ கோவையில் உள்ள கணவரின் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கேயும் அவரை இருக்க விடாமல் அவரது குடும்பத்தினர் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நித்யாஸ்ரீ கொடுத்த புகாரின்பேரில் கணவர் சோனேஷ் மற்றும் அவரது தந்தை குலசேகரன், தாய் புனிதவதி ஆகியோர் மீது கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.