அதன்படி குச்சிக்காடு என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மணி மகன் சரவணன்(32) என தெரியவந்தது. அவனிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. எனவே தேடப்படும் குற்றவாளியாக இருந்த சரவணனை கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.