சென்னை: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, அதிமுக, அமமுக, தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனர்.