தொழிலதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம், லேப்டாப் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் கண்ணன். இவர், நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் தனது காரில் சென்றுள்ளார். அப்போது, காரை துணிகடையின் வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று உடைகளை வாங்கிக்கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தார்.

அப்போது, கார் கண்ணாடி உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கார் கண்ணாடியை திறந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து கண்ணன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவிசி தேடி வருகின்றனர்.

Related posts

கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை

தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு தொடங்கியது