காதலை ஏற்க மறுத்த அக்காவை கொன்ற தம்பி: திருச்சியில் பயங்கரம்

திருச்சி: காதலை ஏற்க மறுத்த அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் 18 வயது மகள், திருச்சியில் உள்ள அத்தை வீட்டில் தங்கி, ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது திருச்சியில் வசிக்கும் மாணவியின் அக்கா தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அவர், அத்தை வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தபோது அங்கு ரத்த காயங்களுடன் மாணவி இறந்து கிடந்தார். இதையடுத்து உடலை இரவோடு இரவாக சொந்த ஊருக்கு உறவினரது காரில் கொண்டு சென்றனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அவர்களது உறவினரை தொடர்பு கொண்டு, மாணவியின் உடலை திருச்சி கொண்டு வரும்படி தெரிவித்தனர். இதையடுத்து அதே காரில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் உறவினரான 17 வயது சிறுவன் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை நேற்று கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கைதான சிறுவனுக்கும், கொலையான மாணவிக்கும் அக்கா, தம்பி உறவுமுறை என்பது தெரியாமல் 4 வருடங்களாக காதலித்துள்ளனர். பின்னர் உறவு முறை தெரிந்ததால் மாணவி சிறுவனுடன் பேசுவதை திடீரென நிறுத்திவிட்டார். மேலும் அவருக்கு உறவுமுறையில் உள்ள ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடந்துள்ளது. இதனையறிந்த சிறுவன், வீட்டில் தனியாக இருந்த மாணவியை சந்தித்து தன்னை திருமணம் செய்யும்படி கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், துப்பட்டாவால் மாணவி கழுத்தை நெரித்ததோடு, கூர்மையான இரும்பு ஆயுதத்தால் குத்திக்கொன்றுள்ளார்’ என தெரிவித்தனர்.

Related posts

டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க ஊருக்குள் வந்த வாகனங்கள் சாலையை அடைத்த கிராம மக்கள்

சோளிங்கர் அருகே 20 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்விநியோகம்

மக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்கலாமா? நான் ரெடி..சரமாரி கேள்வியுடன் பிரதமர் மோடியை அழைக்கும் ராகுல் காந்தி!!