செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி, 3 தோட்டா பறிமுதல்: 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மனாலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெசிமா. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியில் விநாயகமூர்த்திக்கு சொந்தமான வீட்டுடன் கூடிய இடத்தை ரூ.8 லட்சத்துக்கு ெஜசிமா வாங்கியுள்ளார். 2 ஆண்டுக்கு மேலாகியும் வீட்டில் இருந்த பொருட்களை விநாயகமூர்த்தி எடுக்காமல் இருந்துள்ளார். பலமுறை ஜெசிமா கூறியும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து கடந்த மாதம் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் ஜெசிமா புகார் கொடுத்துள்ளார். அதற்கு பிறகும் எடுத்தபாடில்லை.

‘இந்நிலையில், இன்று காலை விநாயகமூர்த்தி, அவரது தாய் சந்திரா மற்றும் ஜெசிமா ஆகியோர் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்த பொருட்களை மூட்டை கட்டி வெளியில் எடுத்து வந்தனர். அப்போது, அங்கிருந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பிரித்து பார்த்தபோது பழைய நாட்டு கைத்துப்பாக்கியும், 3 தோட்டாக்களும் இருந்தது. அதிர்ச்சியடைந்தனர். உடனே செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்கு ஜெசிமா தெரியப்படுத்தினார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவரும் சம்பவ இடத்துக்கு விரைந்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் உதவியுடன் பழைய நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து வீட்டை விற்பனை செய்த விநாயகமூர்த்தி, அவரது நண்பர் பிரபு ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு நாட்டு கைதுப்பாக்கி எப்படி கிடைத்தது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு