சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் போக்சோவில் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதுார் அருகே சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர், தினமும் மொட்டை மாடியில் நின்று கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி வந்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த வாலிபரிடம் சிறுமியின் பெற்றோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு தவறான சைகை காட்டிய வாலிபரை, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு