பாஜ எம்பி மீது பாலியல் வழக்கு மல்யுத்த சிறுமி நீதிபதியிடம் வாக்குமூலம்

புதுடெல்லி: பாஜ எம்பி பிரிஷ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் வழக்கில் 18 வயதுக்கு கீழுள்ள மல்யுத்த வீராங்கனையின் வாக்குமூலம் நேற்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உட்பட 7 வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையை வெளியிடக்கோரி மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இளம் வீராங்கனையின் குற்றச்சாட்டுகள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கு மீதி உள்ள வீராங்கனைகள் அளித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் நிலை குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனையின் வாக்குமூலம் நேற்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு