அதை தீர்த்து வைப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பா.ஜ. நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் (51) என்பவரை அணுகினோம். சென்ற மாதம் வேறு ஒருவர் மூலம் சுமார் 5 கோடிக்கு நிலம் விற்கப்பட்டது. அதை தெரிந்து கொண்ட மின்ட் ரமேஷ் தனது கூட்டாளி நாகர்கோவில் மகேஷ் (47) என்பவருடன் வீட்டிற்கு வந்து எனது கைப்பையில் இருந்த ரூ 45 லட்சத்தை பறித்து சென்றார். இது குறித்து புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் நாராயணி கூறியிருந்தார்.
அதேபோல் தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18ம் தேதி கொரட்டூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார், அதில் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் நேரில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். இந்த 2 புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் தனித்தனியாக இரண்டு வழக்கு பதிவு செய்து மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். மின்ட் ரமேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரவாயலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதற்கு அடுத்த நாளே மின்ட் ரமேஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மின்ட் ரமேஷை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து புழல் சிறையில் உள்ள ரமேஷிடம் கமிஷனர் அருணின் உத்தரவு வழங்கப்பட்டது. இதனால் ஓராண்டுக்கு அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.