பாஜகவுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி: அதிமுக தொண்டர்கள் முழக்கம்

சென்னை: பாஜகவுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி என்று அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஜெயலலிதா பற்றி பேசினால் அண்ணாமலை வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என்று அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெயலலிதா பற்றி மீண்டும் பேசினால் அண்ணாமலை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்திருக்கின்றனர். விருப்பமில்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறலாம் என்று சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரிவிக்கப்படும் என்று அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீலகிரியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த குட்டியானை..!!

மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை

தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்