பின்னர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்துப் பேசிய அவர், பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பிரசாரத்தை தொடங்குவதற்கான காரணம் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ” பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள், அதனால் தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறேன். இந்த விஷயத்தில் எனக்கென்று தனிப்பட்ட திட்டம் எதுவும் கிடையாது. நான் எனக்காக எதையும் செய்யவில்லை, மக்களின் நலனுக்காகத்தான் இதை செய்கிறேன் ” என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஒடிசா சென்று நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ள நிதிஷ் குமார், முன்பு கூறியது போலவே பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, கூடிய விரைவில் நடத்திடுவார் என எதிர்பாக்கப்படுகிறது.