தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜகோபால் கார் டிரைவர் அளித்த புகாரின் பேரில், சென்னையை சேர்ந்த வினோதினி, சென்னை அசோக்நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி (38) மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஆறுமுகபாண்டி (38), திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த நவீன் (34), வெற்றிவேல் என்ற வேல் ஆகியோர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஆறுமுகபாண்டியின் சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே உள்ள இட்டமொழி ஆகும். இவர் தற்போது சென்னையில் உள்ளார்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள வினோதினிக்கும், ராஜகோபாலன் மகன் ஆனந்துக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாகவும், இந்த விரோதத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.