சென்னை :ஏற்கனவே தள்ளுபடி செய்த ஜாமீன் மனுக்களை மீண்டும் கோடைக்கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் இவ்வாறு முறையீடு செய்துள்ளார். கோடைகால விடுமுறை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது.