தஞ்சை: ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கும்பகோணம் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வரும் 21-24 வரை திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் வரும் 20-22 வரை திருச்சியில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. வரும் 24, 25ல் சென்னையில் இருந்து 300, மற்ற வழித்தடங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.