ஆயுத பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் இரவு, பகலாக பொரி தயாரிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயுத பூஜை வழிபாட்டில் பொரி முக்கிய இடம் பிடிக்கும். இதை கருத்தில் கொண்டு கடந்த 10 நாட்களாக சிங்கம்புணரியில் தினமும் ஒரு டன் அரிசியை பொரியாக தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் பொரி தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தனி சிறப்பு மிக்க சிங்கம்புணரி அரிசி பொரிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.