முதல் முறையாக இரவு நேரத்தில் புதிய அக்னி பிரைம் ஏவுகணை சோதனை

பாலசோர்: புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணையானது ஒடிசாவில் நேற்று முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நவீன அக்னி பிரைம் ஏவுகணையானது ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அக்னி பிரைம் ஏவுகணையின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் நேற்று முதல் முறையாக இரவு நேரத்தில் சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதற்காக பல்வேறு இடங்களில் ரேடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தது. அணு ஆயுதம் தாங்கிய அக்னி பிரைம் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆயுத படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!