நடைபயிற்சியில் ஈடுபட்டபோது டாக்டர் தம்பதி மீது தாக்குதல்

புழல்: சோழவரம் அருகே, ஜனப்பன்சத்திரம், தினேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (48). இவரது மனைவி அமுதானி (45). இருவரும் டாக்டர்கள். அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை சோழவரம் அருகே, இவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இருவரையும் வழிமறித்து, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதை பார்த்ததும், மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர். படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம், 2 மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோத தகராறு காரணமாக டாக்டர்கள் மீது தாக்குதல் நடந்ததா அல்லது குடும்ப தகராறு தொடர்பாக நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து!!

தெலுங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்