சென்னை: தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது, அது நாளை சமர்ப்பிக்கப்படும் எனவும் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், ஆர்.கே.சுரேஷ் மீண்டும் நாளை ஆஜராகிறார்.