இவர்களுக்கு தொண்டபாடி கிராமத்தை சேர்ந்த நல்லமாணிக்கம் என்ற பட்டதாரி இளைஞர் 30க்கும் மேற்பட்ட செவி வழி கும்மி பாடல்களை சேகரித்து அதன் மூலம் பயிற்சியளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக முறையாக பயின்று தேர்ச்சி பெற்ற 130 கலைஞர்களின் ஒயில் கும்மி அரங்கேற்றப்பட்டது.
வேப்பந்தட்டை நெய் குப்பை சாலையில் உள்ள பெருமாள்கோயிலில் ஒரு புறம் மாலை 6 மணிக்கு தொடங்கிய ஒயில் கும்மி இரவு 11 மணி வரை நீடித்தது. அழிந்துவரும் கலைகளில் ஒன்றான ஒயில்கும்மிக்கு மீண்டும் புத்துயிர் அளித்துவரும் வேப்பந்தட்டை கிராம கலைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.