சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மிக பிரமாண்ட விழா நடத்தப்பட உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாவிற்கான இலட்சினை (லோகோ) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.