டெல்லி: ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரலில் ஒன்றிய ஜிஎஸ்டியாக ரூ.43,846 கோடியும் மாநிலங்களின் சரக்கு, சேவை வரியாக ரூ.53,538 கோடியும் வசூல் செய்யபட்டுள்ளது. ஒருங்கிணைந்த சரக்கு. சேவை வரியாக ஏப்ரல் மாதத்தில் ரூ.99,623 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.