இதில் தட்கல் டிக்கெட் முறையில் நாளை பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருக்கும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த பிரச்னையை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஈடுபட்டு இருப்பதாகவும் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு, அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவரை அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று செயலிகள் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.