சென்னை: அதிமுக ஆட்சியின்போது அண்ணா பல்கலை.யில் நடந்த முறைகேடு புகாரில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக சட்டப்பேரவை கணக்கு தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டப்பேரவை கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியின்போது அண்ணா பல்கலை.யில் சான்றிதழ் அச்சடித்தது, டிஜிட்டல்மயமாக்கப்பட்டதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது.