தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர் குறித்து பிரதமரின் பேச்சு தரம் தாழ்ந்தது என்று தெரிவித்தார். இந்து, இஸ்லாமியர் என அனைத்து தரப்பினருமே வரி செலுத்தும் பொழுது மதத்தால் பிளவுப்படுத்தி அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெற முயற்சிப்பது சரியில்லை என்றும் இத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஆங்கிலேயர்களை போல பிரித்து ஆட்சி செய்யும் வேலையை பிரதமர் மோடி செய்வதாக குற்றச்சாட்டிய ஜெயக்குமார், இந்திய அரசு சட்டத்தின்படி அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் இருப்பதாக குறிப்பிட்டார்.