இதுகுறித்து அம்மாநில போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை தேடி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிப்பதற்காக ஆந்திர மாநில போலீசார் கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் முகாமிட்டு அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கல்வராயன்மலை இன்னாடு ஊராட்சி நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன்(31) என்பவர் நேற்று விழுப்புரம் 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அகிலா முன்னிலையில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து 15 நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.