அமெரிக்காவில் அலபாமா அருகே டேடேவில்லியில் பிறந்த நாள் கொண்டாட்டம்: துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டேடேவில்லி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர்.

அப்போது பார்ட்டிக்கு வந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? அதற்கான காரணம் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது!

எச்.டி.ரேவண்ணா முன்ஜாமின் மனு பிற்பகல் ஒத்திவைப்பு..!!

தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்