தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது!

தடையை மீறி போராட்டம் அறிவித்த நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய பேரவை தலைவர் மணியரசன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிப்பு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் காவல்துறை அனுமதி மறுத்தது.

தடையை மீறி இன்று வடலூரில் மாலை போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். நாம் தமிழர் கட்சியினர் அறிவிப்பை தொடர்ந்து தற்போது முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் அன்புத் தென்னரசன், சால்டின், சுரேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!!

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பின் சிறப்பு அலைபேசி அழைப்பு 100% முடித்தமைக்கு வண்ணபிரிண்டர் வழங்கி பாராட்டு!!

சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி: உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தகவல்