சென்னை : இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் I.N.D.I.A. கூட்டணி ஆர்வம் காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடக்கும் சம்ருதா பாரத் அறக்கட்டளை சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது என்றார்.