காவல்நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு
அல்காஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடத்த பேச்சின்போதே பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு. பாஜக எம்.எல்.ஏ. சுட்டதில் படுகாயமடைந்த முன்னாள் கவுன்சிலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பாஜக
பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் – ஷிண்டே பிரிவு சிவசேனா முன்னாள் கவுன்சிலர் மகேஷ் இடையே பிரச்சனை இருந்தது. மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியான பாஜக எம்.எல்.ஏ.சுட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.