சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் உள்ள ஜெயக்குமார் உறவினர் ராகுல் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் ராகுல் இன்று காலை கைதான நிலையில் அவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.