7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: தமிழ்நாட்டிலேயே மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ஊட்டி தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இதற்கான பாஸ்டேக் நுழைவு கட்டண வசூல் மையத்தை நுழைவாயில் பகுதியில் இருந்து சுமார் அரை கிமீ தொலைவில் மாற்றும் பணிக்காக கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை 7 நாள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 7 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. இதனால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்துக்கு சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்