இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் அதானி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியிடம் எழுப்பிய 100 கேள்விகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொறுப்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் போது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோருவோம் என்று கூறினார். மேலும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ஜூன் 12ம் தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.