நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் நெப்போலியன்..!!

சென்னை: நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப்பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து, நடிகர்கள் கமல், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000-2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான திரு.நெப்போலியன் அவர்கள் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000 வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் நன்கொடை: நடிகர் சங்கம் மறுப்பு:

நடிகர் சங்கம் கட்டட பணிக்கு பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதாக பரவி வரும் தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களிடம் நிதி வசூலிக்கப்படவில்லை, யாரும் ஏமாற வேண்டாம் என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள்

மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு