இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘சுரன்கோட் காவல் நிலையத்திற்குட்பட்ட தாத்யார் மோர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை கண்டுபிடிக்க அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு முகமை குழுவும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பார்வையிட்டது. இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் டோபா பீர் கிராமத்தில் வசிக்கும் சஃபிர் உசேன் (43), முகமது ஷோகெத் (27), ஷபீர் அகமது (32) ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தற்போது அவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றன.