லால்குடி, மே 11: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிதா 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்ணியம் கிராமத்தைச் சார்ந்த மறைந்த காவலர் ராஜா மற்றும் மாலதி அவர்களின் மகளுமான ஜீவிதாவிற்கு சமூக ஆர்வலர் கோமாகுடி ஆசை தம்பி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.