20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி


நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் கிரீன்வில்லே கவுண்டி பகுதியில் ஸ்டான்டன் பிரிட்ஜ் சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 20 அடி உயரத்துக்கு தூக்கிவீசப்பட்டு எதிர்புறத்தில் இருந்த மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மூன்று பேரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்